பிரபல பாடகியான சின்மயி கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலின் மூலம் பிரபலமானவர்.
மேலும், இவர் பல வேற்று மொழி நடிகைகளுக்கும் டப்பிங் பேசி வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பொழுது, இவரிடம் 500 ரூபாய் நோட்டுகளை தவிர கையில் வேறு பணமே இல்லையாம்.
கையில் இருந்த 500 ரூபாய்க்கும் யாரும் சில்லரை கொடுக்கவில்லையாம்.
அந்த தருணத்தில், டீ குடிப்பதற்கு கூட காசு இல்லாத நிலையில் என்ன செய்வது என முழித்துக் கொண்டிருந்த சின்மயிக்கு அருகிலிருந்த ஏ.டி.எம் காவலாளி ஒருவர் தன்னிடமிருந்த 20 ரூபாயை கொடுத்துள்ளாராம்.
பின்பு, அந்த பனத்தை வாங்கிக் கொண்டு தான் டீ குடித்தாராம் சின்மயி. இதை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.