சிம்பு-தனுஷ்க்கு இடையே சண்டையா- உண்மையை உடைத்த முன்னணி இயக்குனர்

தமிழ் சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கான போட்டி நடிகர்களாக சிம்பு-தனுஷை தான் கூறி வருகின்றனர். இவர்கள் நடிப்பில் சமீபத்தில் வந்த கொடி, அச்சம் என்பது மடமையடா இரண்டு படங்களும் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது.

இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரையும் இயக்கிய கௌதம் மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘சினிமாவிற்கு வெளியில் பலரும் சிம்பு-தனுஷ் நண்பர்களாக இருந்து பிரிந்துவிட்டனர் என்று கூறி வருகிறார்கள்.

ஆனால், உண்மை அவர்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், தனுஷ் எப்போதும் சிம்பு படம் குறித்து ஆவலாக கேட்டு தெரிந்துக்கொள்வார்.

அதனால், பேசுபவர்கள் அனைவருக்கும் பதில் சொல்ல முடியாது’ என கூறியுள்ளார்.