ஜனவரியில் மஹிந்தவின் புதிய கட்சியின் ஆரம்ப மாநாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆரம்ப மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவதந்கு ஏற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க அனுராதபுர நகரத்தில் நடத்தப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் புதிய கட்சிக்கு அதிகாரிகள் சபை ஒன்று நியமிப்படவுள்ளது.

புதிய கட்சிக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளுதல், கிளைகள் உருவாக்குதல் உட்பட ஏற்பாட்டு நடவடிக்கைகள் தற்போது வரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் முதலாவது உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாளான எதிர்வரும் 18ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.