மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சி!

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே அடுத்த தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்து வருகின்ற நிலையில் அவரை மீண்டும் போட்டியிட இணங்கச் செய்யும் முயற்சிகளில் கட்சியினர் ஈடுபட்டு வருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அது தொடர்பான தீர்மானம் கட்சியின் தலைவரான ஜனாதிபதியின் கையிலேயே தங்கியுள்ளது.