பாகுபலி பட தயாரிப்பாளர் வீட்டில் தீடிர் சோதனை!

பாகுபலி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் வேலைகள் பிஸியாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பாகுபலி பட தயாரிப்பாளர்கள் பிரசாத் தேவி நேனி, ஷோபு யார்ல கட்டா ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருவான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

சோதனையைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் மற்ற தயாரிப்பாளர்களும் பீதியில் உள்ளனர்.