இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ஐந்து இந்திய கடற்றொழிலாளர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரும் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இலங்கை கடற்படையினர், இந்த 5 இந்திய கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.







