பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கண் தொடர்பான பிரச்சினைக்குரிய பாடசாலை மாணவர்களுக்கான கண் சிகிச்சை முகாம் இடம்பெற்றது.

புனர்வாழும் புதுவாழ்வும் ஐக்கியராச்சியம் மற்றும் இலங்கை நிறுவனத்தின் ஊடாக அலாக்கா அறக்கட்டளையினூடாக நகுலேஸ்வரி வாசுதேவன் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் இடம்பெற்றது.

கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கண் தொடர்பான பிரச்சினைக்குரிய பாடசாலை மாணவர்களுக்கான கண் சிகிச்சை முகாம் நேற்று இடம்பெற்றது.

இதன்போது கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் 700 மாணவர்களுக்கான கண் பரிசோதனை சிறப்பாக நடைபெற்றதொடு இன்று 20.06.2025 தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கிளிநொச்சி மத்திய கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் மாணவர்களுக்கான கண் பரிசோதனை இடம்பெற உள்ளது.

இதேபோன்று யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு கண் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது. அத்துடன் 23 ஆம் திகதி வவுனியாவிள் உள்ள 1500 பாடசாலை மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது, அதே தினத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள 5000 பாடசாலை மாணவர்களுக்கும் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளது.