சரிகமபவில் மறைந்த கணவனின் ஆசையை நிறைவேற்ற வந்த மனைவி!

சரிகமபவில் தன் கணவனின் ஆசைப்படி அவர் இறந்த பின் வந்து பாடல் பாடிய போட்டியாளர் தற்போது தெரிவாகி இருக்கிறார்.

சரிகமப சீசன் 5 இன்று ஆரம்பமாகிறது இதில் பல திறமைவாய்ந்த போட்டியாளர்கள் பங்குபெற இருக்கின்றனர். தற்போது மெஹா ஓடிஷன் இன்று நடைபெறும்.

இதில் பாடிய ஒரு போட்டியாளரின் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடுவர்களாக சுவேதா, ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஸ், மற்றும் சிறப்பு விருந்தினராக டி ராஜேந்திரன் கலந்துகொண்டுள்ளனர்.

போட்டியில் கலந்துகொண்ட பெண் பவித்ரா என அழைக்கப்படுகிறார். இவர் பற்றி நடுவர்கள் கேட்கும் போது அவர் கூறுகிறார் தன் கணவன் இறந்து ஐந்து மாதங்கள் தான் ஆகிறது.

10 நிமிடத்தில் வருவேன் என கூறிவிட்டு சென்றவர் விபத்தில் இறந்துவிட்டார் அவரின் ஆசைக்காக தான் நான் இந்த மேடையை தேர்ந்தெடுத்துள்ளேன் என மிகவும் வருத்ததுடன் கூறினார்.

இதனை கேட்ட அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்கலங்கினர். இந்த நேரத்தில் நடுவர் சுவேதாமோகன் நான் உங்களுக்கு துணையாக இருப்பேன் நீங்கள் தைரியமாக இருங்கள் என மேடைக்கு வந்து கூறகிறார். இது இன்று ஒளிபரப்பபடும்.