கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் அதிரடியாக பேசிய விஜய்!

நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான தளபதி விஜய் வருடா வருடம் 12+ மற்றும் 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து கல்வி விருதுகளை வழங்குவார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வந்த நிலையில், இன்று மூன்றாம் ஆண்டு கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்களுக்கு விருது வழங்குவதற்கு முன் தளபதி விஜய் பேசினார்.

விஜய் பேச்சு
விஜய் பேசியதில் முக்கியமான விஷயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்..

உங்கள் குழந்தைகளின் விஷயத்தில் எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள். அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள். அவர்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதன்படி வழிநடத்துங்கள்.
நீட் மட்டும்தான் உலகமா? நீட்ட தாண்டி இந்த உலகம் ரொம்ப பெருசு. அதில் நீங்க சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கு.

ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்பது பெரிய விஷயமல்ல. சாதாரண விஷயம்தான். நல்லவர்கள். நம்பிக்கையானவர்கள். இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்.

சாதி மதத்தை வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கம் போய்விடாதீர்கள். உங்கள் எண்ணத்தை பாதிக்க அனுமதிக்காதீர்கள். விவசாயிகள் சாதி, மதம் பார்த்து பொருளை விளைவிப்பதில்லை, தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்து உற்பத்தி செய்வதில்லை. வெயில், மழையில் எல்லாம் சாதி மதமா இருக்கிறது? போதைப் பொருட்களை அறவே ஒதுக்கியதுபோல், சாதி-மதத்தையும் தூரம் ஒதுக்குவது நல்லது.

பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் கூட, சாதிசாயம் பூசுவதுபோல் ஒரு கேள்வியை கேட்டுள்ளார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.