கண்டி, தெல்தெனிய பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் போதைப் பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அம்பகஹலந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கொழும்பிலிருந்து போதைப்பொருட்களை கொண்டு வந்து தெல்தெனிய, திகன போன்ற பிரதேசங்களில் விற்பனை செய்வதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.