மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

கண்டி – கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பில்மீகம பிரதேசத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இரவு 10.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ள நிலையில் தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

எவ்வாறிருப்பினும், விற்பனை நிலையத்தில் இருந்த 20 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கடுகண்ணாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.