யாழ் விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம்(18) துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் , சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது, யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.