மின் தடை ஏற்ப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டது அரசு!

நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை, இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

மொத்த மின்சார உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் சூரிய மின் உற்பத்தியும் முழு மின்சார அமைப்பின் வீழ்ச்சி என்பன, மின்தடைக்கான முதன்மைக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை முழுமையான விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்று சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

பாணந்துறை துணை மின்நிலையத்தின் 33 kV Bus Bar நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடையால், குறைந்த மின்சார தேவை மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக நிலையற்றதாக இருந்த தேசிய மின் கட்டமைப்பு சமநிலையற்றதாக மாறியது.

மேலும், தானியங்கி அவசரகால முறிவு மேலாண்மை செயல்முறையால் அமைப்பை மீட்டெடுக்க முடியவில்லை. இதன் விளைவாக, நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

முந்தைய பல ஞாயிற்றுக்கிழமைகளில் தேசிய மின்சார அமைப்பு இத்தகைய ஆபத்தான சூழ்நிலையை நெருங்கி வந்தாலும், இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டுப் பிரிவின் திறமையால் முழுமையான மின் தடை தடுக்கப்பட்டது.

இருப்பினும், இன்றைய தேசிய மின்சார அமைப்பின் மோசமான நிலை காரணமாக, மொத்த மின்வெட்டைத் தடுத்திருக்க முடியாது போனதாக தெரிவிக்கப்படுகின்றது.