கடும் வெப்பத்தால் குழந்தைகளுக்கு ஆபத்து!

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் பலர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இத்தகவலை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் அதிக வெப்பம் நிலவுவதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

திரவங்களை வழங்க வேண்டும்
எனவே, குழந்தைகளுக்கு வெப்பம் தொடர்பான நோய் வராமல் தடுக்க போதுமான கனிமச்சத்துக்களுடன் கூடிய திரவங்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று மருத்துவர்அறிவுறுத்தினார்.

தற்போதைய வெப்பமான காலநிலையின் போது நீரிழப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்படுகின்றனர்.

அதேசமயம் போதுமான திரவங்கள் மற்றும் தாதுப்பொருட்களை எடுத்துக் கொள்ளத் தவறினால், சோர்வு, தலைவலி, தூக்கம், வாந்தி, உடல் வலி, தூக்கமின்மை, மற்றும் பசியின்மை போன்ற முக்கியமான உடல்நலச் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் குழந்தை நல மருத்துவர் பெரேரா கூறினார்.