சிலருக்கு சைவ உணவுகள் மட்டும் தான் பிடிக்கும். சிலருக்கு அசைவம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் ஒரு ஆண்டிற்கே பல விரதங்கள் வந்து அசைவ பிரியர்களுக்கே ஒரு துர்திஷ்டத்தை கொடுக்கும்.
இப்படி அசைவம் பிடித்தவர்கள் அசைவம் சாப்பிட கிடைக்காத நேரத்தில் சைவ பொருட்களை கொண்டு அசைவ மீன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 50 மில்லி
தக்காளி – 2
வெந்தயம் – ¼ டீ ஸ்பூன்
சோம்பு – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கருவேப்பிலை – ஒரு கொத்து
பூண்டு – 10 பல்
பெரிய வெங்காயம் – 2
புளி – 2
பெரிய எலுமிச்சை அளவு
மீன் செய்ய
தட்டைப்பயறு -50 கிராம்
பச்சைப்பயறு – 50 கிராம்
பச்சை மிளகாய் – 5
சோம்பு – சிறிதளவு
மஞ்சள்தூள் – ½ டீ ஸ்பூன்
லச்சக்கட்டை கீரை – 3 இலை
மசாலா அரைக்க
சின்ன வெங்காயம் – 15 அல்லது 18
தக்காளி – 3 (நறுக்கியது)
வரமிளகாய் -10
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ½ டீ ஸ்பூன்
கசகசா – ¼ டீ ஸ்பூன்
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் தட்டைப்பயறு மற்றும் பச்சைபயரை சுத்தமாக கழுவி தண்ணீர் சேர்த்து ஊற வைத்து எடுத்து கொள்ள வேண்டும். வெங்காயத்தை தோல் உரித்து கழுவி சுத்தம் செய்து சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் பச்சை மிளகாயை இரண்டாக கீறி எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் சின்ன வெங்காயம், வரமிளகாய், மல்லித்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கசகசா, துருவிய தேங்காய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வறுத்து ஆற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு
மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். புளியை நன்றாக ஊற வைத்து கரைத்து வடித்து எடுத்து வைக்த்து கொள்ளவும்.
பின்னர் ஊற வைத்த தட்டைப்பயறு, பச்சைப்பயறு, பச்சை மிளகாய், சோம்பு, மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக அரைத்து மாவு எடுத்து கொள்ளவும்.
பின் லச்சக்கட்டைக் கீரையின் இலையில் மாவை கொலுக்கட்டை போன்று வைத்து நடுவில் ஒரு மரக்குச்சியை மீனின் நடுவில் முள் போல மாவின் நடுவில் வைக்கவும்.
இலையை ரோல் போல் சுருட்டி ஒரு குச்சியால் குத்திவிட்டால், மாவு வெளியே வராது. பின் இதை இட்லித் தட்டில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
பின்னர் ஆற விட்டு நடுவில் உள்ள மரக்குச்சியை எடுத்து துண்டுகளாக மீன் போல வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்துக்கொள்ளவும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும். பின்னர் சோம்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிய விடவும். அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் கரைத்து வடிகட்டிய புளிக்கரைசலைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
கடைசியாக தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெயில் பொரித்த துண்டுகளை சேர்த்து கால் மணி நேரம் மிதமான தீயில் வேக வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி கறியை இறக்க வேண்டும். இதை சாதத்துடன் சாப்பிட்டால் அசல் மீன் கறி போலவே இருக்கும்.