40 வயதில் திருமணம் செய்யும் எஸ்.ஜே. சூர்யா பட நடிகை!

மீரா சோப்ரா
எஸ்.ஜே. சூர்யா இயக்கிய அன்பே ஆருயிரே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்த இவர், கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், இவர் மீண்டும் தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இப்படியொரு நிலையில், 40 வயது ஆகும் நடிகை மீரா சோப்ராவிற்கு திருமணம் ஆகப்போகிறது என தகவல் வெளிவந்தது. நடிகர், நடிகைகளுக்கு திருமணம் என கூறி, பல வதந்திகள் அவ்வப்போது வெளியாகும் என்பதால், நடிகை மீரா சோப்ராவிடமே இது குறித்து கேட்டுள்ளனர்.

திருமணம்

அப்போது, ‘ஆம் எனக்கு திருமணம் ஆகப்போகிறது. என் திருமணம் குறித்து வெளிவந்துள்ள செய்தி உண்மை தான். மார்ச் மாதம் எனக்கு திருமணம் நடக்கிறது. ராஜஸ்தானில் நடக்கும் என்னுடைய திருமணத்திற்கு தேதியும் குறித்துவிட்டனர்’ என கூறியிருந்தார்.

மாப்பிள்ளை யார் தெரியுமா
மீரா சோப்ரா. தனது திருமணம் குறித்து வெளிவந்த செய்தி உண்மை தான் என நடிகை மீரா சோப்ரா கூறிவிட்டார். ஆனால், இதுவரை மீரா சோப்ரா திருமணம் செய்துகொள்ள போகும் நபர் யார், அந்த மாப்பிள்ளை என குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.