நாட்டை வந்தடைந்தார் கில்மிஷா

தென்னிந்தியாவின் பிரபல தமிழ்த் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை பெண் கில்மிஷா நாடு திரும்பியுள்ளார்.

இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (28)நண்பகல் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

தென்னிந்தியாவின் பிரபல தமிழ்த் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சிக்கான போட்டியில் இலங்கைச் சிறுமியான கில்மிஷா முதலிடம் பெற்றார்.

நாடு திரும்பிய கில்மிஷா
இலங்கையிலிருந்து தென்னிந்திய இசைப் போட்டிகளில் இலங்கையில் இருந்து பங்கு பற்றுகின்ற நிலையில், முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளமை என்பது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் நாடு திரும்பிய கில்மிஷாவை பெருமளவானவர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்து வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.