சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீ முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்கிறார் தெரியுமா?

பாடகி நித்யஸ்ரீ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எத்தனையோ கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது.

அப்படி சிறியவர்களுக்கான நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டு நடுவர்களை கவர்ந்து மக்களின் பேராதரவை பெற்றவர் நித்யஸ்ரீ. தமிழை தாண்டி ஹிந்தியிலும் பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தற்போது நிறைய இசைக் கச்சேரிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.

முக அழகு
ஹெர்பல் விஷயங்களை மட்டும் தான் முதலில் பயன்படுத்துவாராம்.

அதில் முதலாவது வேப்பிலை, அதனை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து நன்கு ஆற வைத்து பின்பு அந்த நீரால் தினமும் காலையில் முகத்தை வாஷ் செய்வாராம்.

புதினாவை நன்கு அரைத்து அந்த சாறுடன் கிளீசரின் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்வாராம். ஐஸ்கட்டிகளை எடுத்து முகத்தில் அப்படியே தடவி மசாஜ் செய்வாராம், இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி வெள்ளையாக்குமாம்.

உருளைக்கிழங்கை நன்கு மைய அரைத்து அதை அப்படியே முகம், கழுத்து முழுவதும் தடவுவாராம்.