வட மாகாண ஆளுநர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நாளைய தினம் அரச அலுவல்களின் நிமித்தம் வெளியே செல்லவுள்ளதால் ஆளுநர் செயலகத்திற்கு வருகை தரமாட்டார் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் நாளைய தினம் ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்திக்க முடியாது என்று ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆளுநர் நாளை செயலகத்தில் இல்லாத காரணத்தால் மக்கள் வீண் அலைச்சல் அடையக்கூடாது எனும் நோக்கில் இத்தகவல் வழங்கப்பட்டுள்ளது.