60 வயதில் இரண்டாவது திருமணம் செய்தமை குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் ஆஷிஷ்

நடிகர் ஆஷிஷ்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி.

இவர் தமிழ் சினிமாவில் நிறைய வில்லன் வேடத்தில் நடித்துள்ளார், அந்த கதாபாத்திரங்களை விட விஜய்யின் கில்லி அவருக்கு அப்பாவாக நடித்து மக்களிடம் நல்ல ரீச் பெற்றவர்.

60 வயதான இவர் ரூபாலி என்பவரை மறுமணம் செய்துகொண்டார், அவரது திருமணம் பற்றி சமூக வலைதளங்களில் அதிகம் விவாதத்தை கிளப்பியது.

திருமணம் ஏன்
தற்போது 60 வயதிலும் ஏன் திருமணம் செய்துகொண்டேன் என ஆஷிஷ் கூறியுள்ளார். அதில் அவர், ஒருவருடன் பயணம் செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக மட்டுமே அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எனவே அதுகுறித்த அறிவிப்பை இந்த பிரபஞ்சத்துக்கு தெரிவிக்கிறேன். என்னுடைய 55வது வயதில் அப்படி ஒருவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். அப்படித்தான் நான் ரூபாலியை சந்தித்தேன்.

இருவரும் நன்றாக பழகினோம், பின் கணவன்-மனைவியாக பயணிக்கலாம் என தோன்றியது திருமணம் செய்தோம் என கூறியுள்ளார்.