சுடிதாருடன் வந்து ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த பாக்யா

அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நகர்ந்துக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். அந்தவகையில் இன்று பாக்யா சேலையை விட்டுவிட்டு சுடிதார் அணிந்து வந்த காட்சி அதிகம் வைரலாகி வருகின்றது.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.

இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் விட்ட சவாலை நிறைவேற்றத் துடிக்கும் பெண்ணாக காண்பித்து வருகிறார்கள்.

கோபியிடம் விட்ட சவாலை வெல்லவதற்காக திருமண ஆர்டர்களை எடுத்து சமைத்து அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு வீட்டையும் சவாலையும் சமாளித்து வருகிறார்.

இவரின் எந்த முயற்சி எடுத்தாலும் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் ராதிகா. பாக்கியாவின் தோழியாக இருந்த ராதிகா கோபியால் பாக்யாவிற்கு எதிரியாக மாறிவிட்டார்.

தற்போது ஆங்கிலம் படிக்கப் போகும் பாக்யா, அங்கு பழனிச்சாமியுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து வயிறு எரிந்துக் கொண்டிருக்கிறார் கோபி, நாளுக்கு நாள் பாக்யா நிறைய விடயங்களைக் கற்று வளர்ந்துக் கொண்டே வருகிறார்.

சுடிதாருடன் வந்த பக்யா