இறக்கும் போது நடிகர் மயில்சாமி கையில் எவ்வளவு பணம் இருந்தது தெரியுமா?

மயில்சாமி
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக கெரியரை தொடங்கி அதன் பின் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் மயில்சாமி. விவேக் உள்ளிட்ட பல நடிகர்கள் உடன் அவர் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கின்றன.

கடந்த மாதம் மயில்சாமி திடீரென மாரடைப்பு ஏற்பாடு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

கடைசியில் இருந்தது இவ்வளவு தான்..
மயில்சாமி தன்னுடன் உதவி என கேட்டு வருபவர்களுக்கு இல்லை என சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்திருக்கிறார். அவரது அந்த குணத்தை பற்றி பலரும் உருக்கமாக பேசி இருந்தனர்.

தற்போது மயில் சாமி கடைசியாக நடித்த கிளாஸ்மேட்ஸ் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் மயிலசாமியின் மகன்கள் கலந்துகொண்டு அவரை பற்றி உருக்கமாக பேசினார்கள்.

மேலும் மயில்சாமி இறக்கும் முன் நடித்த படத்திற்கு 30 ஆயிரம் ருபாய் சம்பளம் கிடைத்தது, அதில் 25 ஆயிரம் ருபாய் ஒருவருக்கும், 4 ஆயிரம் ருபாய் அஸிஸ்டன்டுக்கும், 1000 ரூபாய் மகன்களுக்கும் கொடுத்தாராம். அதன் பிறகு அவர் கையில் வெறும் 30 ருபாய் மட்டுமே இருந்தது என மயில்சாமியின் அசிஸ்டன்ட் கூறி இருக்கிறார்.