யாழ் வல்வெட்டித்துறையில் மீட்க்கப்பட்ட மோட்டர் வெடிகுண்டு

யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (12.03.2023) பதிவாகியுள்ளது.

அதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று மோட்டார் குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.