அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அரச ஊழியர்களுக்கே முதலில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிவாரணம் வழங்க நடவடிக்கை

அரச ஊழியர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே இந்த வரி விதிப்பில் உள்ளனர், மற்ற 90 சதவீத அரச ஊழியர்களுக்கு இந்த வரி இல்லை.

எனவே, அரசின் வருமான ஆதாரம் அதிகரித்தால், அரசுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.