மௌனராகம் சீரியலின் இறுதிநாள் புகைப்படம் வெளியானது சோகத்தில் ரசிகர்கள்

2017ம் ஆண்டு கிருத்திகா மற்றும் ஷெரின் என 2 குழந்தைகளை மையமாக கொண்டு 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் மௌன ராகம்.

நல்ல காட்சியமைப்பு, சிறந்த பாடல்கள், குழந்தைகளின் அழகிய நடிப்பு என இந்த சீரியலின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை கண்டது.

முதல் பாகம் முடிய அதேவேகத்தில் இரண்டாம் பாகம் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2வது பாகத்தில் நிறைய புதுமுக நடிகர்கள் நடிக்க தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் தான் சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தொடர் முடியப்போவதாக தகவல் வந்தது.

கடைசி நாள் போட்டோ
தற்போது இன்று மௌன ராகம் 2 தொடரின் கடைசிநாள் படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் இவ்வளவு சீக்கிரம் ஏன் முடித்தீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)