நடிகை குஷ்பு
90களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு.
தமிழ், தெலுங்கு. ஹிந்தி என பல மொழிகளில் நடித்துவந்த இவர் மார்க்கெட் குறைந்ததும் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள், அவரது மகளின் 20வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்
பயங்கர வலியில் நடிகை
எப்போதும் பிஸியாக சினிமா மற்றும் அரசியல் என இருக்கும் நடிகை குஷ்பு தற்போது வீட்டில் பயங்கர வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாராம்.
காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்து, ஒரு விசித்திரமான விபத்து உங்களை வலியில் ஆழ்த்தும் போது, ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும், சாதிக்கும்வரை நிறுத்தமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram