சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், “இவன் பிச்சைக்காரந்தான்னு சாதாரணமா நெனச்சியா???” என்று பதிவிட்டு இன்று மாலை 5 மணிக்கு அப்டேட் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இவன் பிச்சைக்காரந்தான்னு சாதாரணமா நெனச்சியா???
మీరు అతన్ని కేవలం మరో బిచ్చగాడు అనుకుంటున్నారా???
Today Evening 5pm
#Pichaikkaran2 #Bichagadu2 #ANTIBIKILI
— vijayantony (@vijayantony) December 20, 2022