கையடக்க தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை!

கையடக்க தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பலர் தொலைகாட்சி பார்க்க, இசை கேட்க, சமூக ஊடகங்களைப் பயன்படுத்த மற்றும் கல்வி கற்கும் நடவடிக்கைகளுக்கும் பெரும்பாலும் கையடக்க தொலைபேசி மற்றும் டேட்டாவை பயன்படுத்துகின்றார்கள். இது சமீப காலமாக தெளிவாகத் தெரிகிறது.

தொலைபேசி கட்டணங்கள் மற்றும் டேட்டா கட்டணங்கள் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கையடக்கத் தொலைபேசிக் கட்டணங்கள் மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தின் கவனத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என ஊடகத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.