மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி குளம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்றைய தினம் (27.11.2022) மீட்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதியை சேர்ந்த 57வயதுடைய வீரக்குட்டி தவராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணை
கடந்த ஐந்து தினங்களாக குறித்த நபரை காணாத நிலையில் தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் திருநீற்றுக்கேணி குளம் பகுதியில் அவரது பாதணி இருப்பதைக்கண்டு குளப்பகுதியில் தேடியபோது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் வலிப்பு நோயினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டவர் எனவும், மதுபோதைக்கு அடிமையானவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரின் உத்தரவுக்கு அமைய காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுமணிமாறன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தினை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.