பிரபல தேசிய கல்வியற் கல்லூரியில் மோதல்! 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மாணவர்களுக்கு இடையே இடம் பெற்ற மோதலிலே 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பம் காலி அக்மீமன ருஹுணு தேசிய கல்வியற் கல்லூரியிலேயே இடம் பெற்றுள்ளது.

இந்த மோதல் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.

முன்னதாக இந்த கல்லூரியில் பயின்றவர்களும், தற்போது பயிற்சி ஆசிரியர்களாக பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள குழுவினரும் திடீரென விடுதிக்கு வந்து தம்மை தாக்கியதாக காயமடைந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்மீமன காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.