நடிகர் ஜெயம்ரவிக்கு கொரொனோ தொற்று!

ஜெயம் ரவி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி, அவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். மாபெரும் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் ரூ. 450 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்தது.

அப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் திடீரென ஜெயம் ரவி ட்விட்டர் பக்கத்தில் தான் கொரோனா இருப்பது உறுதியாகி இருப்பதாகவும், இதனால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் அறிவித்து இருந்தார்.

மேலும் தற்போது ஜெயம் ரவி அவரின் ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவி அர்த்தி அவருக்காக சிக்கிரம் நலம் பெற வேண்டும் என மேசெஜுடன் பூக்கொந்தை வைத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.