ஆதிவாசிகளின் தலைவருக்கு கொலை மிரட்டல்!

ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலா எத்தோவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர் செயற்பாட்டாளரான வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு ஆதிவாசிகளின் தலைவர் கோரிக்கை விடுத்து வந்தார்.

இவ்வாறு கோரிக்கை விடுத்த காரணத்தினால் அனாமேதய அடிப்படையில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக ஆதிவாசித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமது ஊரில் வாழ்ந்து வரும் வசந்த மட்டுமன்றி எந்தவொரு சிங்கள தமிழ் இளைஞருக்கு பிரச்சினை வந்தாலும் தாம் குரல் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வசந்த முதலிகேவிற்காக குரல் கொடுத்த காரணத்தினால் கொலைமிரட்டல் விடுத்து அனாமேதய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அதிகாரிகளிடம் கோருவதாக தெரிவித்துள்ளார்.