9 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி 37 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா ராஜேஸ்வரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மேக்னா களமிறங்கினர். ஷபாலி வர்மா 8 ரன்னில் அவுட் ஆனார்.

அதனையடுத்து வேகப்பந்து வீச்சாளர் பூஜா களமிறங்கினார். மேக்னா- பூஜா ஜோடி சிறப்பாக விளையாடி 6 ஓவரில் அணியை வெற்றி பெற வைத்தனர். மேக்னா 20 ரன்னிலும் பூஜா 12 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.