முயலால் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்ப்பட்டுள்ள பாரிய நஷ்டம்!

ஆஸ்திரேலியாவில், ஐரோப்பிய இனத்தை சேர்ந்த காட்டு முயல்கள் மேய்ச்சல் நிலங்களையும் பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதுமட்டுமின்றி இதனால் நிலத்தின் உற்பத்தியும் குறைந்து வருகிறது.

இது தவிர அவை மற்ற உள்நாட்டு வனவிலங்குகளையும் தாக்கி அழிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு வகை முயல்கள் சுமார் 300 வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

இவற்றால், ஆஸ்திரேலியா விவசாயத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 மில்லியன் டாலர் அல்லது சுமார் ரூ.1600 கோடி இழப்பை சந்திக்கிறது.

பயிர்கள், தாவரங்கள் மற்றும் பிற விலங்குகளை சேதப்படுத்தும் இந்த முயல்களின் எண்ணிக்கை 200 மில்லியனுக்கும் அதிகமாகும். இவை அவுஸ்திரேலியாவுக்கு பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றன.

இந்த முயல்கள் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல. அவை வெளிநாட்டில் இருந்த வந்த இனங்கள் பிரிவை சேர்ந்தது.

கடந்த பத்தாண்டுகளாக ஆஸ்திரேலியா ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது. இந்த சவாலை, வேறொரு நாடோ அல்லது அமைப்போ கொடுக்கவில்லை.

முயல் ஆஸ்திரேலியா சென்ற கதை

டிசம்பர் 25, 1859 கிறிஸ்துமஸ் அன்று, மெல்போர்ன் துறைமுகத்திற்கு வந்த இங்கிலாந்து கப்பலில் ஒரு நபருக்கு ஒரு சிறப்பு பரிசு வந்தது. தாமஸ் ஆஸ்டின் என்ற நபருக்கு, இங்கிலாந்தில் இருந்து கிறிஸ்துமஸ் பரிசாக 24 முயல்கள் வந்தன.

முதலில், இங்கிலாந்தில் உள்ள ஆஸ்டின் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டின் வளாகத்தில் பல முயல்களை வளர்க்க விரும்பியுள்ளார்.

எனவே அவர் அவற்றை இங்கிலாந்திலிருந்து வரவழைக்க எண்ணியியுள்ளார். இந்த 24 முயல்களில் சில காட்டு மற்றும் சில வளர்ப்பு முயல்கள். இந்த 24 முயல்களிலிருந்து மூன்றே ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான முயல்களாக பெருகின.

இங்கிலாந்தில் இருந்து ஆஸ்டினுக்கு அனுப்பப்பட்ட முயல்கள் மெல்போர்னை அடைய 80 நாட்கள் ஆனதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கப்பலில் உள்ள காட்டு மற்றும் வளர்ப்பு முயல்களுக்கு இடையில் இனப்பெருக்கம் நடந்துள்ளது.

இந்த நிலையில் அங்கு முயல்களின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவிற்கு பெருகி வந்துள்ளதாக அந்த தகவல் கூறுகின்றன.