தீவிரமடையும் உக்ரைன் ரஷ்ய போர்

உக்ரைன் மீது ரஷ்யா நாளை புதன்கிழமையுடன் (24-08-2022) கடந்த 6 மாதங்களாக தாக்குதலை தொடந்து வருகின்றது.

இருப்பினும் இந்த போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. மாறாக போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

போரின் சமீபத்திய பிரச்சனையாக உக்ரைனில் உள்ள ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணு அலையான ஜபோரிஜியா அணு உலை மாறியிருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜபோரிஜியா அணு உலைக்கு அருகில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இது மிகப்பெரிய பேரழிவு அணு விபத்தை ஏற்படுத்தும் என உலக நாடுகள் கவலை தெரிவித்தன.

குறிப்பாக ஐ.நா.வும், அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளும் ஜபோரிஜியா அணு உலை அருகே தாக்குதல்களில் ஈடுபட கூடாது என உக்ரைன் மற்றும் ரஷ்யாவை வலியுறுத்தின.

இந்த நிலையில் ஜபோரிஜியா அணு உலைக்கு அருகில் ரஷ்யா நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜபோரிஜியா அணுக்கரு உலயில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நிகோபோல் என்ற இடத்தில் ரஷ்யா தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

எனினும் இது குறித்து ரஷ்யா தரப்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்படவில்லை.