ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெறுகின்றது.

முக்கியமான சில அமைச்சரவைப் பத்திரங்களுக்கு இதன்போது அனுமதி வழங்கப்படவுள்ளது.

சர்வகட்சி அரசு தொடர்பில் முடிவு..

அத்துடன், சர்வகட்சி அரசு சம்பந்தமாகவும் முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

சர்வகட்சி அரசு தொடர்பில், கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தவுள்ளார்.