மஹிந்த அமரவீரவின் வீட்டின் முன்பு மலர் வளையம் வைத்த போராட்டகாரர்கள்

அங்குனுகொலபெலஸ்ஸவில் உள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டின் முன்பு போராட்டக்காரர்கள் சிலர் மலர் வலையம் வைத்துள்ளனர்.

கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு முன்னாள் அமைச்சருக்கு எதிராக இதன்போது அவரது வீடு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மலர் வலையம் வைத்தும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்புக்களை பதிவு செய்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்துக்கு மஹிந்த அமரவீர ஆதரவளிக்கக்கூடாதெனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.