நாட்டின் அனைத்து கடைகளுக்கும் மூடவேண்டி வரும் எச்சரிக்கை விடுக்கும் ரணில்!

எதிர்வரும் மாதங்களில் பொருளாதார பிரச்சினை உக்கிரமடைந்து விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட கடைகள் அனைத்தையும் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை மேலும் காலம் தாழ்த்த முடியாது, நாடாளுமன்றத்தின் ஊடாக அந்த தீர்வினைக் காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட அறிவித்தலொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.