இன்றைய தினம் இருளில் மூழ்கவுள்ள இலங்கை?

இலங்கையில் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, P முதல் W வரையான 8 வலயங்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் குறித்தப் பகுதிகளில் பிற்பகல் 05 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.