தையிட்டி விகாரைக்கு தென்னிலங்கையில் வழிபட வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் கஞ்சாவுடன் திங்கட்கிழமை (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வழிபட வந்த நபர் அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை அடுத்து பொலிஸார் அவரை விசாரணைக்குட்படுத்திய நிலையில் அவரிடமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை பலாலி பொலிஸார் கைது செய்ததுடன் நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.