எதற்கும் துணிந்தவன் 2 கோடி கூட வசூல் செய்யலையா.!?

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கேரளா மாநிலத்தில் ஐந்து நாட்களில் 2 கோடி வசூல் செய்ய வில்லை என்று விநியோகிஸ்தர் ஒருவர் புலம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழகம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியாகியது. தமிழகத்தில் இந்த படத்திற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் பல தியேட்டர்களில் காற்று வாங்கியது.

இந்த நிலையில், கேரள மாநில விநியோகிஸ்தர் உன்னி கிருஷ்ணன் இந்த படம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அதில், “சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் படம் வெளியாகி ஐந்து நாள் ஆகியும் கூட இன்னும் இரண்டு கோடி கூட வசூல் செய்யவில்லை. அதுபோல ராதேஷ்யாம் திரைப்படமும் 20 லட்சத்தை கூட தாண்டவில்லை.” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.