இந்தியாவில் இறந்தும் 4 பேரை வாழவைத்த 11 வயது சிறுமி.!!

இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இம்மாச்சலபிரதேசத்தின் மண்டியை சேர்ந்த சிறுமி நய்னா தாக்கூர்(வயது 11), கடந்த 3ம் தேதி சாலை விபத்தில் சிக்கிய நய்னாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், அங்கு நய்னாவுக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தாலும், கடந்த 7ம் தேதி மூளைச்சாவு அடைந்துவிட்டார்.

இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர், இந்நிலையில் அவர்களிடம் மருத்துவர்கள்,”

உங்கள் குழந்தையின் சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள் சில நோயாளிகளுக்கு பொருத்தமாக உள்ளது.

எனவே உடல் உறுப்புதானம் செய்ய உதவினால், நான்கு பேருக்கு உங்கள் மகள் மறுவாழ்வு அளித்ததுபோல் இருக்கும்” என கூறியுள்ளனர்.

இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே, நய்னாவின் கண் விழிகள் மற்றும் சிறுநீரகங்கள் மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டது.

இதன்மூலம் இறந்தும் 4 பேருக்கு வாழ்வளித்துள்ளார், இதனால் நய்னாவின் பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.