மேலும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றன் இறக்கம் கண்ட நிலையில், ரஷ்யா உக்ரைன் போருக்கு பின் பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன.

அதனால், தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 85 ரூபாய் உயர்ந்து, ₹5055-க்கு விற்பனையாகிறது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹40440 க்கு விற்பனையாகிறது. இதனால், திருமணங்களுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

வெள்ளி விலை கிராமுக்கு 1.80 ரூபாய் உயர்ந்து ₹75.20-க்கு விற்கப்படுகிறது. போர் முடிவுக்கு வந்தால் மட்டுனே பங்கு சந்தைகள் உச்சமடையும்…