உலக மகளீர் கோப்பையை கைப்பற்றிக்கொண்டது இந்திய மகளீர் அணி

பெண்களுக்கான மகளிர் உலக கோப்பை போட்டி நியூசிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இதில், முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்க செய்த இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 75 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார்.

மற்றொரு தொடங்க வீராங்கனை ஷபாலி வர்மா டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த தீப்தி ஷர்மா 40 ரன்கள் விளாசினார். கேப்டன் மிதாலி ராஜ் (9), ஹர்மன்ப்ரீத் கவுர் (5), ரிச்சா கோஷ் (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா ஒரு கட்டத்தில் 114 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. 7-வது விக்கெட்டுக்கு ஸ்னே ராணாவுடன், பூஜா வஸ்ட்ராகர் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. பூஜா 59 பந்தில் 67 ரன்களும், ஸ்னே ராணா ஆட்டமிழக்கால் 48 பந்தில் 53 ரன்களும் சேர்க்க இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் குவித்தது. 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் வீராங்கனைகள் பேட்டிங் செய்தனர்.

இந்திய வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 43 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் அனது.

இதனால் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. மகளிர் அணியின் வெற்றிக்கு முன்னாள் ஜாம்பவான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.