உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கிய ரஷ்ய நடிகை!

உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் (Vladimir Putin) முடிவுக்கு எதிராக உள்நாட்டிலேயே போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இதேவேளை, உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் இன்று 4-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அமைச்சரகம் தெரிவித்திருந்தது.

ஆனால் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது. இதனால் உக்ரைனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த ரஷ்யா நேற்றைய தினம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே உக்ரைனில் போர் தொடுத்து வரும் ரஷிய அதிபர் புதினின் முடிவுக்கு எதிராக உள்நாட்டிலேயே போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பலர், தங்கள் அதிபரின் போர் முடிவுக்காக உக்ரைன் மக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் நாட்டிற்கு பிரபல ரஷ்ய நடிகை லியா (Liya Akhedzhakova) என்பவர் 10,000 டாலர்கள் நிதியுதவி வழங்கி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதேபோல், ரஷ்ய பொது மக்களும் நிதியுதவி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள நடிகை லியா நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பும் கோரியுள்ளார்.