வெளிநாட்டில் இருந்து காதலனை தேடி வந்த பெண் இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழப்பு!

வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் குளியலறையிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் வெளிநாட்டு பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நெதர்லாந்து பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் நெதர்லாந்தை சேர்ந்த 67 வயதுடைய கலிடீன் நிஷா காடன் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சமூக வலைத்தளத்தினூடாக அறிமுகமான இலங்கை இளைஞரொருவருடன் காதல் தொடர்பு கொண்டிருந்த இப்பெண் அவரை தேடி இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண் இலங்கை வந்து அந்த இளைஞருடன் வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சடலம் தற்போது களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.