நடுவர்கள் கொடுத்த கமெண்ட் கேட்டு பூரிப்பில் நடிகை தேவயானி

ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப பாடல் நிகழ்ச்சி.

கடைசியாக சரிகமப நிகழ்ச்சியின் சிறுவர்களுக்கான சீசன் முடிவடைய அதே வேகத்தில் சீனியர்களுக்கான சீசன் தொடங்கப்பட்டது. கடந்த மே 24ம் தேதி சரிகமப சீனியர்ஸ் 5வது சீசன் ஒளிபரப்பாக இருப்பதாக புரொமோ வெளியாகி இருந்தது.

இந்த சீசனில் ஸ்ரீநிவாஸ், விஜய் ஸ்ரீ பிரசாத், கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

எமோஷ்னல்
இந்த சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் பிரபல நடிகை தேவயானியின் மகள் இனியா தனது அம்மா பெயரை பயன்படுத்தாலும் தனது முயற்சியால் முன்னேற வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் போட்டிபோட வந்துள்ளார்.

இந்த வாரம் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடல் பாடி நடுவர்களை அசத்தியுள்ளார். அவரது பாடலை கேட்டு நடுவர்கள் மாஸான கமெண்ட் கொடுத்த தேவயானி எமோஷ்னல் ஆகியுள்ளார்.