மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பென்னி தயாள்…

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் 20 சிறுவர்கள் ஒருவருக்கு ஒருவர் இணையாக போட்டியிட்டு வருகிறார்கள்.

இதுவரை மைனா, மகாபா ஆனந்த் இணைந்து தொகுத்து வந்த நிகழ்ச்சியில், கடந்த வாரத்தில் இருந்து பிரியங்கா, மாகாபா இருவரும் இணைந்து தொகுத்து வருகிறார்கள்.

இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கெட்டப் சுற்று நடைபெறவுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் படங்களில் இருக்கும் கெட்டப்பை போட்டுகொண்டு பாடி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக பென்னி தயாள் பங்கேற்றுள்ளார்.

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் நடந்த சில பிரச்சனையின் காரணமாக பென்னி தயாள், இனி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிய மாட்டேன் என்று கூறியிருந்தார்.

ஆனால், இதனை மறுத்த ரசிகர்களுக்காக மீண்டும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பென்னி தயாள், வந்துள்ளது சந்தோஷத்தை தந்துள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..