வாயை சுத்தி கறுப்பா இருக்கா இதை செய்து பாருங்கள்

சிலருக்கு என்ன தான் முகத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தாலும் வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக பார்க்கவே அசிங்கமாக இருக்கும்.

சருமத்தில் மெலனின் என்னும் நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால் இது நிகழ்கிறது.

அதுமட்டுமின்றி, சில வாழ்க்கை முறை பழக்கம் உள்ளிட்ட வேறு சில காரணிகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

பப்பாளி
பப்பாளியில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவி புரியும்.

ஆகவே உங்கள் வாயைச் சுற்றி கருமையாக இருந்தால் நன்கு கனிந்த பப்பாளியை மசித்து அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் வாய் பகுதியைச் சுற்றி தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள அதிகப்படியான நிறமிகளை நீக்க உதவும். இந்த வழி சென்சிடிவ் சருமத்தினருக்கும் மிகவும் நல்லது.

அதற்கு உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து, முகத்தில் மற்றும் வாயைச் சுற்றி 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

மஞ்சள்
மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு பளபளப்பையும், பொலிவையும் தருவதோடு, புத்துயிர் அளிக்கும்.

உங்களின் முகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் கருமையாக இருந்தால் அப்பகுதியில் உள்ள மெலனின் அளவைக் குறைக்க மஞ்சள் உதவி புரியும்.

அதற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, அதில் ரோஸ்வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, வாயைச் சுற்றி தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.