நாட்டின் தங்க கையிருப்பினை விற்பனை செய்வதற்கு அமைச்சரவையில் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடு எர்நோக்கியுள்ள பாரதூரமான டொலர் தட்டுபாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பிலான யோசனையொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யோசனைத் திட்டம் தொடர்பில் அமைச்சரவையில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும், தங்க கையிருப்பினை விற்பனை செய்வது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.